சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பால்தாக்கரேவின் பேரன் நிகர் தாக்கரே ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவர் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஷிண்டே அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ” ஏக்நாத் ஷிண்டே எனது தாத்தாவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறார். எனவே நான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தேவைப்பட்டால் நான் இடைத்தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவாக இருப்பேன். ” என்றார்.
நிகர் தாக்கரே பால் தாக்கரேவின் மூத்த மகன் பிந்துமாதவின் மகன் ஆவார். பிந்து மாதவ் 1996-ம் ஆண்டு நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
இதேபோல பால் தாக்கரேவின் மற்றொரு மகன் ஜெய்தேவ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஸ்மிதா ஆகியோரும் ஏக்நாத்ஷிண்டேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.