சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதிகள் போட்ட அதிரடி தீர்ப்பால் பரபரப்பு!

சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதிகள் போட்ட அதிரடி தீர்ப்பால் பரபரப்பு!

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த போது திறன் மேம்பாட்டு நிதியில் ரூ371 கோடி மோசடி நடந்தது என்பது வழக்கு. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் தம் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் இம்மனுவை ஆந்திரா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

இதனையடுத்து ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெல்லா திரிவேதி ஆகியோர் விசாரித்தனர்.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இருவரும் இன்று இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

1 minute ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

32 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

59 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

1 hour ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

2 hours ago

This website uses cookies.