திருப்பதி ஏழுமலையானுக்கு கரூர் வைஸ்யா பேங்க் சார்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 5 மின்சார வாகனங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
கரூர் வைசியா பேங்க் நிர்வாக இயக்குனர் ரமேஷ்பாபு இன்று காலை திருப்பதி மலையில் தேவஸ்தானத்திற்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தால் இயங்கும் ஐந்து மோட்டார் வாகனங்களை நன்கொடையாக வழங்கினார்.
மோட்டார் வாகனங்களுக்கு ஏழுமலையான் கோவில் எதிரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் அவற்றிற்கு உரிய ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஆகியவற்றை அவர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து நிருபர்களுடன் பேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாபு பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை இதன் மூலம் தேவஸ்தானம் எங்களுக்கு வழங்கி உள்ளது.
இதற்காக தேவஸ்தானத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
இது போன்ற வாகனங்களை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கோவிலுக்கு செல்லவும், கோவிலில் இருந்து வந்த பின் அவர்கள் பேருந்து நிலையம் அல்லது கார் பார்க்கிங் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.