காளைகள் துன்புறுத்தப்படுதா? ஒரு சில போட்டோவ ஆதாரமா வெச்சு நிரூபிக்க முடியாது : விலங்குகள் அமைப்புக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. ஆனால் பாரம்பரிய விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராட்டம் நடந்தது. சென்னை மெரினாவில் திரண்டு இளைஞர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை உலகமே வியந்து பார்த்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கடந்த 2017-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ஆனால் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளன.

இதனிடையே, தமிழக அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஜல்லிக்கட்டு பாரம்பரிய தமிழக விளையாட்டு. கிராமங்கள் முதல் உட்கிராமங்கள் வரை நடத்தப்படுகிறது.
விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை. விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தவறானது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்படுகின்றன.

விலங்கு வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையான தடை விதிக்கக்கூடாது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அவசர சட்டம் இயற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இதன்படி சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என சில புகைப்படங்களை விலங்குகள் அமைப்பு காட்டியது.

இத்தகைய சில புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு போதுமானது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை இயற்றிய சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்த நீதிபதிகள்,
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும்29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.