திருப்பதி : காளஹஸ்தி அருகே தமிழ்நாடு அரசு பேருந்து, லாரி ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானதில் டிரைவர்கள், கண்டக்டர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தது.
திருப்பதி காளஹஸ்தி இடையே உள்ள மெர்லபாக்கத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் முன் பகுதிகளும் கடுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தின் ஓட்டுநர் முனிராஜ், கண்டக்டர் சுரேஷ், காட்பாடியை சேர்ந்த லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து பற்றி தகவல் அறிந்த ஏற்பேடு போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.