திருப்பதி: வேலூரில் இருந்து திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்த சுமார் 300க்கும் மேற்பட்டபக்தர்களை திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தான நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 500 பேர் ஒரு குழுவாக இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்து ஏழுமலையானை வழிபட்டு செல்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானத்தால் வழங்கப்படுகிறது. குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் குழுவில் சுமார் 150 பேருக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் கிடைத்த நிலையில் மற்றவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தாங்கள் திட்டமிட்டபடி குடியாத்தத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட 500 பக்தர்களும் இன்று காலை திருப்பதி மலையடிவாரத்தை அடைந்தனர.
ஆனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தரிசன டிக்கெட்டுகளை உடன் கொண்டு வந்திருக்கும் பக்தர்கள் மட்டுமே திருப்பதிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறி 350 பக்தர்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.
நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக மாலை போட்டு விரதம் இருந்து பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வந்திருக்கிறோம். எனவே எப்படியாவது எங்களை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் நிபந்தனைகளை காரணமாக டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தற்போது டிக்கெட் கொண்டுவந்திருக்கும் மக்கள் மட்டும் திருப்பதி மலை செல்லலாம் மற்றவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பி வைப்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
எனவே டிக்கெட் கொண்டு வந்திருந்த பக்தர்கள் திருப்பதிக்கு சென்று விட்ட நிலையில் மற்ற 350 பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.