டெல்லியில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்களும் சந்தித்து பேசுகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழகத்தில் கடந்த மாதம் பெய்க கனமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வட மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.37,907 கோடியை நிவாரணமாக தமிழக அரசு கோரியது. மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சுமார் 900 கோடியை வழங்கியது. இதையடுத்து, மத்திய குழுவினரும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர். பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரிடையாகவே நிவாரணத் தொகையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் சார்பில் நேரம் ஒதுக்க கோரப்பட்டது.
இந்த நிலையில், நாளை மதியம் 3.30 மணியளவில் அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்களும் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் போது வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.