விவோ மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில் அந்நிறுவன இயக்குநர்கள் தப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ‘விவோ’ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா, மராட்டியம் உள்ளிட்ட 48 இடங்களில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு எப்ஐஆர் பதிவு செய்தது.
இந்த நிலையில், விவோ மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 119 வங்கி கணக்குகளில் ரூ.66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, 2 கிலோ தங்க கட்டிகள், ரூ.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் இரண்டு பேர் இந்தியாவில் இருந்து தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இதன் தொடர்ச்சியாக விவோ தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் விவோ நிறுவனமும் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.