ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் நடந்த ஒப்பந்தத்தில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு அவரை கைது செய்ய நந்தயால் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக டிஐஜி தலைமையிலான போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, கைதுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, இது சட்டவிரோதம் என போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து அங்கு குவிந்த தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள், போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 6 மணியளவில் சந்திரபாபுவை போலீசார் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேச கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.