ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் நடந்த ஒப்பந்தத்தில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு அவரை கைது செய்ய நந்தயால் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக டிஐஜி தலைமையிலான போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, கைதுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, இது சட்டவிரோதம் என போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து அங்கு குவிந்த தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள், போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 6 மணியளவில் சந்திரபாபுவை போலீசார் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேச கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.