மத்தியபிரதேசம்: தனது செல்போனை திருடிச் சென்ற நபரை துரத்திச் சென்ற ஆசிரியர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷதோல் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் நேமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று பணி முடிந்து, தனது சொந்த ஊரான சாகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 7 மணியளவில் அவருடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர், மனோஜ் நேமாவிடம் செல்போனை கேட்டுள்ளார். தனது நண்பருக்கு அவசரமாக தகவல் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியதால், மனோஜ் நேமாவும் செல்போனை கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கி பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர், ரயிலின் வேகம் சற்று குறையவே, செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதை பார்த்த மனோஜும் ரயிலில் இருந்து குதித்து அவரை துரத்திச் சென்றார். அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் அவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் நேமா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.