தெலங்கானாவில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது, நிகழ்ந்த சாலை விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நந்திப்பாடு கிராமத்தை சேர்ந்த ஆறு பேர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று சாமி கும்பிட்ட பின் காரில் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த கார் இன்று அதிகாலை தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாளகுடா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கார் மீது வேகமாக மோதி கார் நசுங்கியது.
விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் உடல் நசுங்கி காருக்குள்ளே பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்தவரை மீட்டு நலகொண்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மரணமடைந்த ஐந்து பேரின் உடல்களும் நலகொண்டா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.