தெலங்கானா ; செகந்திராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிகல் பைக் ஷோரூம் என்ற பெயரில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பல கோடி மதிப்பிலான மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலாகின.
மேலும், ஷோரூமில் ஏற்பட்ட இந்த தீவிபத்தானது, அந்தக் கட்டிடத்தின் 2வது தளத்தில் உள்ள தனியார் லாட்ஜுக்கும் பரவியது. இரவு நேரம் என்பதால், பலர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தீ விபத்து காரணமாக எழுந்த கரும்புகையில் சிக்கி லாட்ஜில் தங்கி இருந்த பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் உட்பட எட்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த சீதாராமன், பாலாஜி ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.