காலியாகும் காங்கிரஸ்.. காவியாகுமா தெலுங்கானா? வெளியானது புதிய கருத்து கணிப்புகள்!!!

காலியாகும் காங்கிரஸ்.. காவியாகுமா தெலுங்கானா? வெளியானது புதிய கருத்து கணிப்புகள்!!!

தெலுங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 60 இடங்களில் வெல்ல வேண்டும். இப்போது அங்கே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பிஆர்எஸ் இறங்குகிறது.

மறுபுறம் ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் செல்வாக்காக இருந்தது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட போது காங்கிரஸ் இரு மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்தது. விட்ட அந்த இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் இந்த முறை இறங்குகிறது. ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கிறது.

இதற்கிடையே தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் தெலுங்கானா தேர்தலில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஒரே அளவிலான சீட்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் கடும் போட்டி இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே தெலுங்கானாவில் காங்கிரஸ் 53-55 இடங்களில் வெல்லும் என்று ஜன்மத் அமைப்பு கூறியுள்ளது.

அதேபோல தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பிஆர்எஸ் கட்சியும் 53-55 இடங்களில் வெல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடும் போட்டி இருப்பது தெரிகிறது.

அதேபோல இந்த தெலுங்கானா தேர்தலில் பாஜக 4 அல்லது 5 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று ஜன்மத் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி வழக்கம் போல 6, 7 இடங்களில் வெல்லும் என்று அந்த ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 1 அல்லது 2 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே இதுவரை வந்த பல சர்வேகளில் போட்டி இருந்தாலும் கூட காங்கிரஸ் தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த சர்வேயில் இரு கட்சிகளுக்கும் ஒரே அளவில் சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தேர்தல் நெருங்க நெருங்க பிஆர்எஸ் கட்சி தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளதையே இது காட்டுகிறது. காங்கிரஸிலும் பல தலைவர்களுக்கு சீட் இல்லாததால் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் புது சர்வே முடிவுக்கு ஒரு காரணமாகும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

5 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

6 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

7 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

7 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

8 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

9 hours ago

This website uses cookies.