தெலங்கானாவில் பல இடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தெலங்கானாவில் வானிலை மாற்றம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷன நிலையை அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக, அதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெலுங்கானாவில் உள்ள மக்கள் இன்னும் 3 நாட்களுக்கு உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திடீரென ஆலங்கட்டி மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சாலைகளில் வெள்ளைப் போர்வை போற்றியது போல பனிக்கட்டிகள் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆலங்கட்டி மழையை பிடித்து சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ளது.
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
This website uses cookies.