தன்னை கைவிட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை அறிந்து உறவினர்களுடன் சென்று கணவரை தாக்கி காவல் நிலையத்தில் மனைவி ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரைச் சேர்ந்தவர் டாக்டர் பானு பிரகாஷ். தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் பானு பிரகாஷ் பணியாற்றி வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள பானு பிரகாஷ் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக இருந்து வருகிறார்.
மேலும், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அவருடைய மனைவி கணவருடன் சேர்ந்து வாழ்வேன் என்றும், கணவரை பிரிய எனக்கு மனம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மருத்துவர் பானு பிரகாஷ், வேறு ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதனை அறிந்த மனைவி தனது உறவினர்களுடன் அங்கு சென்று கணவருக்கு தர்ம அடி கொடுத்தார். மேலும், தன்னுடைய கணவரின் அந்தரங்க லீலைகள் பற்றி அந்த மனைவி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில், டாக்டரின் மனைவி தன்னுடைய திருமணத்தின்போது, 10 லட்ச ரூபாய் பணமும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களும் வரதட்சணையாக அவருக்கு கொடுக்கப்பட்டது. வரதட்சணையாக கிடைத்த பணம், நகை ஆகிய அனைத்தையும் அவர்களே வைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு என்னை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுவிட்டார். என்னுடைய கணவர் அதன் பின்னர் வீட்டுக்கு வருவதில்லை.. தற்போது என்னிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார் என்று கூறினார்.
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
This website uses cookies.