கவனம் சிதறியதால் நடந்த விபத்து.. பைக்குகள் மோதிக் கொண்ட பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 8:05 pm

முன் பின் யோசிக்காமல் அதிவேகமாக வந்த பைக்குகள் மோதி 6 பேர் காயமடைந்த காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனை அருகே நேற்று இரவு நபர் ஒருவர் முன்பின் யோசிக்காமல் மோட்டர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆறு பேர் படு காயமடைந்தனர். விபத்து தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி உள்ளன.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!