தெலுங்கானா : மேட்சல் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரி ஏறி பதை பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேட்சலில் இன்று அதிகாலை ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது .
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் மற்றும் சாலையை கடக்க முயன்ற நபர் ஆகியோர் கீழே விழுந்தனர். அதே நேரத்தில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த கனரக லாரி கீழே விழுந்து கிடந்த வாகன ஓட்டிகள் மீது ஏறி இறங்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆண், பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மூன்று பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன .
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.