திருப்பதி: காளஹஸ்தியில் ரிவர்ஸ் எடுக்கும் போது சுவர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் தமிழக பக்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்,
தர்மபுரியை சேர்ந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு இன்று காலை வந்து இருந்தனர். சாமி கும்பிட்ட பின் அவர்கள் காளஹஸ்தியில் உள்ள டூரிஸ்ட் பேருந்து நிலையம் அருகே சுவர் ஓரத்தில் உட்காரந்திருந்தனர்.
அப்போது தனியார் பேருந்து ஒன்றை அதன் ஓட்டுனர் ரிவர்ஸ் எடுத்தார். பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக சுவரின் மீது மோதி அந்த சுவர் இடிந்து அங்கு உட்கார்ந்து இருந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் மீது விழுந்தது.
இந்த விபத்தில் விஜயன் இடிபாடுகளில் சிக்கி மரணம் அடைந்தார். முனியப்பன், காமராஜர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறியும் அங்கு வந்த காளகஸ்தி போலீசார் காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மரணம் அடைந்த விஜயின் உடல் காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பேருந்து ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.