பெண் கொலை வழக்கில் கிளி அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் 2 பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஆக்ராவைச் சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா, அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இந்தக் கொலையை செய்தது தெரிய வந்தது. மேலும், வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே, தனது வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த கிளி, மனைவி நீம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சரியாக சாப்பிடாமல், நடவடிக்கைகளிலும் மாற்றத்தோடு இருந்ததை விஜய் ஷர்மா கவனித்துள்ளார். இதனால், மனைவி கொலை செய்யப்பட்டதை இந்த கிளி பார்த்திருக்கலாம் என அவருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் அவர் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை கிளியிடம் கூறியுள்ளார். அப்போது அவர் தனது மருகமன் ஆசு பெயரை கூறியதும், கிளி ஆவேசமடைந்து ஆசு.. ஆசு… என கத்தியுள்ளது. இதனால், கொலையாளி தனது மருமகனாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனே போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனே போலீசாரும் கிளி முன்பு பலரின் பெயர்களை கூறிய நிலையில் ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கிளி கத்தியது.
இதையடுத்து போலீசார் ஆசுவை பிடித்து விசாரித்ததில், ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்து நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், கிளியின் சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோனி மாசி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.