ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஸ்ரீநிவாஸ். அதே பகுதியில் போக்குவரத்து காவலராக ஆக பணிபுரிபவர் குமார்.
இந்நிலையில் இன்று அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீநிவாஸ் இடம் காரை நிறுத்த சொல்லி குமார் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று தொலைவு சென்று காரை நிறுத்தியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.
இதனால் ஸ்ரீநிவாஸ் மது அருந்தி இருக்கலாம் என சந்தேகமடைந்த குமார் அவரிடம் சோதனை மேற்கொண்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரைத் தாக்கத் தொடங்கினார். இதில் போக்குவரத்து காவலர் குமார் காயமடைந்தார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஸ்ரீநிவாசை பிடித்த குமார் காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கார் ஓட்டுனர் போக்குவரத்து காவலரே தாக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.