ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள மல்லநூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த தேவேந்திரா என்பவரின் மனைவி உஷா தங்கள் ஊரில் இருந்து மேலும் 4 பேருடன் பெங்களூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இன்று காலை மல்லனூர் கிராமத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த யானை ஒன்று அவர்களை விரட்டி சென்றது.
அப்போது உஷா கீழே விழுந்துவிட்ட நிலையில் அவரை யானை மிதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.
யானை தாக்கி பெண் மரணமடைந்தது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
யானைத் தாக்கி உஷா மரணம் அடைந்த சட்ட நேரத்தில் அதே பகுதியில் உள்ள சப்பனிகுண்டா கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் யானை தாக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.
ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பேரையும் ஒரே நாளில் யானை தாக்கி மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.