வீட்டுக்குள் புகுந்து மென்பொறியாளரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் : ஷாக் சிசிடிவி காட்சி.. செல்பி வீடியோ எடுத்து கதறிய இளைஞர்!!

ஆந்திரா : கும்பலாக வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் மென்பொருள் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பலமனேர் பாத்த பேட்டை போலீஸ் லைன் பகுதியில் வசித்து வருபவர் நிரஞ்சன். மென்பொருள் பொறியாளரான இவர் வொர்க் பிரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்குள் புகுந்த சில இளைஞர்கள் சுத்தியால் அடித்தும் கால்களால் உதைத்தும் கண்மூடித்தனமாக நிரஞ்சன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தீவிர காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் புகுந்த சில இளைஞர்கள் என்னை கண்மூடித்தனமாக தாக்கி வீட்டை உடனடியாக காலி செய்து செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக
நிரஞ்சன் செல்பி வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து பலமனேர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

18 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

16 hours ago

This website uses cookies.