தனியாக வசித்த மனைவியின் வீட்டை நோட்டமிட்ட கணவன்.. நடுரோட்டில் கழுத்தை பிளேடால் அறுத்த கொடூரம்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பூர்ணா மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வாசுபள்ளி பிரசாத் – நீலிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவரது இல்லற வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாகவே இருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நீலிமா கணவனை பிரிந்து அரிலோவா டிஐசி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரசாத் தன்னுடைய தாய் முத்தியாளம்மா உடன் நீலிமா வசிக்கும் வீட்டுக்கு வந்தார். நீலிமாவை வெளியே அழைத்து என்னை வேண்டாம் என கூறி இங்கு யாருடன் குடும்பம் நடத்துகிறாய் என கூறி சண்டை போட்டுள்ளார்.
பின்னர் தான் கொண்டு வந்த பிளேடால் பிரசாத், தனது மனைவி நீலிமாவை கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தினார். இதில் கழுத்து முகத்தின் மீது பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்தம் வெளியேறிய நிலையில் நீலிமாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நீலிமா அளித்த புகாரின் பேரில் விசாகப்பட்டணம் போலீசார் பிரசாத் மற்றும் அவரது தாயார் முத்தியாளம்மா இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.