தனியாக வசித்த மனைவியின் வீட்டை நோட்டமிட்ட கணவன்.. நடுரோட்டில் கழுத்தை பிளேடால் அறுத்த கொடூரம்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பூர்ணா மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வாசுபள்ளி பிரசாத் – நீலிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவரது இல்லற வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாகவே இருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நீலிமா கணவனை பிரிந்து அரிலோவா டிஐசி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரசாத் தன்னுடைய தாய் முத்தியாளம்மா உடன் நீலிமா வசிக்கும் வீட்டுக்கு வந்தார். நீலிமாவை வெளியே அழைத்து என்னை வேண்டாம் என கூறி இங்கு யாருடன் குடும்பம் நடத்துகிறாய் என கூறி சண்டை போட்டுள்ளார்.
பின்னர் தான் கொண்டு வந்த பிளேடால் பிரசாத், தனது மனைவி நீலிமாவை கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தினார். இதில் கழுத்து முகத்தின் மீது பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்தம் வெளியேறிய நிலையில் நீலிமாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நீலிமா அளித்த புகாரின் பேரில் விசாகப்பட்டணம் போலீசார் பிரசாத் மற்றும் அவரது தாயார் முத்தியாளம்மா இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.