நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.. இது முக்கிய பிரச்சனை : ராகுல் காந்தி வீடியோ!

இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டு பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், நீட் தேர்வு மற்றும் தற்போது நிலவும் நீட் வினாத்தாள் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக I.N.D.I.A எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகிறது.

இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய நியாத்தை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறோம் என பதிவிட்டு இருந்தார். மேலும் வீடியோ பதிவில் கூறுகையில், இந்த விவாதம் அனைத்து மனவர்களுக்கானது.

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். இதில் பெரிய மோசடி நடந்துள்ளது. நீட் தேர்வுக்காக வருடக்கணக்கில் பயிற்சி பெறுகிறார்கள்.

அவர்களின் கனவு இப்படியான முறைகேடுகளால் தகர்க்கப்டுகிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இதனை அனைவரும் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விவாதத்தை அமைதியாக நடத்த நான் கேட்டுக்கொள்கிறேன். நீட் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளளது.

இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும். இதில் மாணவர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து
நாங்கள் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம் என்று ராகுல் காந்தி வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

3 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

4 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

4 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

4 hours ago

This website uses cookies.