கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் 5,338 மாணவிகள் மாயமான நிலையில், பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நேரம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியில் உருவாகி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா..? தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : அன்புமணி எச்சரிக்கை..!!
அதாவது, கேரளாவில் இளம்பெண்களை குறிவைத்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, அவர்களை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைப்பது போன்ற கதைக்களத்தை அந்தப் படம் கொண்டிருக்கும். இந்தப் படத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நிஜம் என்று நம்ப வைப்பது போன்று, கேரளாவில் இளம் பெண்கள் மாயமாகியிருப்பதாக தமிழக பாஜக எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவியுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளா அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 4 ஆண்டுகளில் 5,338 இளம் பெண்கள் மாயமாகியிருப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விபரங்களை வெளியிட்ட வானதி சீனிவாசன், பெண்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாத கேரள அரசு, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாயமான பெண்களின் குடும்பத்தினரும், சமூகத்தினரும் தாங்க முடியாத வேதனையில் இருப்பதாகவும், நமது பெண்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.