சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அமராவதி அருகே தத்தவாடா கிராமத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறியது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. அந்த லாரி தத்தவாடா கிராமம் சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் நேற்று நள்ளிரவு நேரத்தில் வெடித்து சிதறின. தீ விபத்து ஏற்பட்ட உடன் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த தீ விபத்து காரணமாக அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், அருகில் இருந்த கிராம மக்கள் ஆகியோர் கடும் அச்சமடைந்தனர். சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சத்தம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வரை கேட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி தீயை அணைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.