உடைந்ததா கூட்டணி? கைவிரித்த முக்கிய தலைவர்கள் : தள்ளிப்போகிறது எதிர்க்கட்சிகள் கூட்டம்!!
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் வலுவான அணியை எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ளன. இந்த அணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தது.
இதைத்தொடர்ந்து 3-வது கூட்டம் மும்பையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியானது. காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆகஸ்டு 25 மற்றும் 26-ந் தேதிகளில் கூட்டணியின் பல்வேறு தலைவர்களுக்கு பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சரத்பவார் போன்ற முக்கிய தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட அலுவல்களில் பங்கேற்பதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளனர்.
எனவே இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இது செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படலாம் எனவும் அவர்கள் கூறினர்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.