மணிப்பூர் பிரச்னையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் முன், தனது சொந்த இடத்தில் உள்ள பிரச்னையை முதல்வர் கவனிக்க வேண்டும் என்று ராஜேந்திர சிங் கூறியிருந்தார்.
இதையடுத்து அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது. ராஜஸ்தானில் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அசோக் கெலாட் (காங்கிரஸ்) அரசை, பாரதிய ஜனதா கட்சி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளது.
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவின் பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ராஜஸ்தான் ராஜ்பவன் செயலகம் வெளியிட்டது.
மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவையில் இருந்து பரிந்துரை செய்ததாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது.
உண்மையைப் பேசியதற்காக ராஜஸ்தான் அரசில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார், இதிலிருந்து அங்கு நேர்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு இடம் இல்லை என்றும், ஊழல்வாதிகள் மற்றும் பொய்யர்களுக்கு மட்டுமே அங்கு வரவேற்பு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது என்று கடுமையாக சாட்டியுள்ளது பாஜக அரசு.
ராஜஸ்தான் சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், மணிப்பூரில் பெண்களின் நிர்வாண வீடியோ குறித்து சற்று காட்டமாக பேசினார். அப்போது அவரை இடைமறித்து பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, தனது அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ராஜஸ்தானில் பெண்களை பாதுகாக்க தவறிவிட்டோம், ஆகவே முதலில் நாம் நமது இடத்தை குறித்து கவலைப்பட வேண்டும். பிறகு தான் அடுத்த மாநிலத்தை பற்றி பேசவேண்டும் என்று கூறியிருந்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.