4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. விசாரணையில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!

4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. கொலை வழக்கில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசனா சேத் (39) என்பவர் பெங்களூரூவில் Mindful AI LAB எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டது. கணவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். தற்போது 4 வயது குழந்தையுடன் சுசனா சேத் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 6ம் தேதி கோவா சென்றிருந்தார்.

அப்போது, தனது 4 வயது குழந்தைக்கு இருமல் மருந்துகளை கொடுத்து கொலை செய்ய முயன்றதுடன், தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை சூட்கேஸில் வைத்து காரில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து, அவரை பாதி வழியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர், அவரிடம் மனநலப் பரிசோதனையை செய்த போலீசார், நேற்று மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக கோவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, முகத்தை கருப்பு துணியால் மூடியபடி வந்த அவர், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தற்கொலைக்கு முயன்ற போது அவரது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரது கைப்பையை போலீசார் சோதனை செய்ததில், அதில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதாவது, டிஸ்யூ பேப்பரில், தனது குழந்தையை பார்க்க கணவனுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்று குறிப்பிடிப்பட்டிருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே, இந்த கொடூர கொலை சம்பவம் நடக்கும் போது இந்தோனேஷியாவில் இருந்த பெண்ணின் கணவர் வெங்கட் ரமணன் பெங்களூருக்கு விரைந்தார்.

அவரிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் வெங்கட் ரமணன் இன்று விசாரணைக்கு செல்லும் போது அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குவிந்து இருந்தனர். எனினும், செய்தியாளர்களிடம் பேச மறுத்த வெங்கட் ரமணன், போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகாரத்து நடைமுறைகள் சென்று கொண்டிருந்தாதாக வெங்கட் ரமணன்” கூறினார். மேலும், மகனை பார்க்க தனக்கு உரிமை இருந்தாலும் சுச்சனா சேத், கடந்த 5 வாரங்களாக பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

50 minutes ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

2 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

2 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

3 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

3 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

4 hours ago

This website uses cookies.