பிரச்சாரம் செய்த எம்.பிக்கு கத்திக்குத்து.. கூட்டத்தை கை கொடுப்பது போல கத்தியால் குத்திய மர்மநபர்!!
தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் துப்பாக் சட்டசபை தொகுதிக்கு மேடாக் எம்பி பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று தெலுங்கானாவில் தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் மர்ம நபர் வேட்பாளர் பிரபாகர் ரெட்டிக்கு கை குலுக்க சென்றார்.
பிரபாகர் ரெட்டியும் கை கொடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனே கட்சி நிர்வாகிகளும் பிரபாகர் ரெட்டி ஆதரவாளர்களும் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நபரை சரமாரியாக தாக்கினர். அந்த மர்மநபரின் பெயர் ராஜு என தெரியவந்தது. கத்தியால் ஏன் குத்தினார் என தெரியவில்லை.
இதையடுத்து பிரபாகர் ரெட்டியை அவருடைய காரிலேயே கஜ்வெல்லில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி ஹரீஷ் ராவ் எம்பியை தொடர்பு கொண்டு பேசினார்.
தேவைப்பட்டால் பிரபாகர் ரெட்டியை ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.