தலைநகர் டெல்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
இந்தப் பெயர் மாற்றம் கடந்த 14-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக, அருங்காட்சியகத்தின் செயற்குழு துணைத்தலைவர் கூறியிருந்தார்.
மத்திய அரசின் இந்த பெயர் மாற்றம் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம் பெயர் மாற்றம் என்பது நேருவின் மரபை மறுப்பதும், அவமதிப்பதுமே என அக்கட்சி சாடி வருகிறது.
இந்த நிலையில், நேரு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
லடாக் செல்லும் வழியில், விமான நிலையத்தில் பேசிய அவர், ஜவகர்லால் நேரு அவர்கள் செய்த சிறப்பான பணிக்காகவே நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் பெயரால் மட்டுமல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், நேரு இந்திய மக்களின் இதயங்களில் வாழ்கிறார். பெயர்களை மாற்றுவது பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதி என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…
This website uses cookies.