எம்பிக்களின் எண்ணிக்கை உயரப்போகிறது… சரியான இடத்தில் செங்கோல் உள்ளது : பிரதமர் மோடி சூசகம்!!

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வருகிறது. அதன்படி, புதிய நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு வி.டி.சாவர்க்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பின் நாடாளுமன்ற அவைக்குள் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஒன்றாக நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.
அடுத்ததாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடி தனது முதல் சிறப்புரையை ஆற்றினார். அவற்றை கீழே காணலாம்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது. அத்தகைய நாள் மே 28 ஆம் தேதி ஆகும். தற்பொழுது, புதிய பாதையில் புதிய பயணத்தை நாம் தற்போது தொடங்கியுள்ளோம்.

இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. எனவே, இந்த புதிய நாடாளுமன்றமும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்களித்து உலகின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் எங்கு அமர்வார்கள். எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் காலத்தின் தேவையாக உள்ளது.

செங்கோல் ஆனது சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது எங்கள் அதிர்ஷ்டம்.

செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம் ‘செங்கோல் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

10 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.