குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி.
இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக நேற்று தொழிலதிபரிடமிருந்து பிஷோனி 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது, அவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
பின்னர், இரவு முழுவதும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் உள்ள பிஷோனியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இரவு முழுவதும் சோதனை நீடித்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. தொடர்ந்து லஞ்ச புகாரில் பிஷோனியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முற்பட்டனர்.
அப்போது, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் இருந்து பிஷோனி கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த பிஷோனி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.