ஆந்திரா : முதியோர் உதவித்தொகை வருகிறதா என கேட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்கே ரோஜாவிக்கு முதியோர் உதவித்தொகை வருகிறது. என்னை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை எனவே திருமணம் செய்து வையுங்கள் என கோரிக்கை விடுத்த முதியவர்ரால் சிரிப்பலை ஏற்பட்டது.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு அனைத்து எம்எல்ஏக்களும் அவரவர்களுடைய சட்டமன்ற தொகுதியில் “கடப கடப்பகி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்” என்ற நிகழ்ச்சி வாயிலாக மக்கள் குறைகளை நேரடியாக சென்று கேட்டு அறிய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திலுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் தங்களுடைய சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்கே ரோஜா தனது சட்ட மன்ற தொகுதியான நகரி சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது முதியவர் ஒருவரிடம் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வருகிறதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த முதியவர் முதியோர் உதவி தொகை வருகிறது. ஆனால் என்னை பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை எனவே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் ஆர்.கே ரோஜா குபீரென சிரித்து விட்டார். அரசால் உதவித் தொகை மட்டுமே வழங்க முடியும் திருமணம் எல்லாம் செய்து வைக்க இயலாது என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.