கேரளா : கொல்லம் அருகே பாகன்களை காலால் மிதித்த யானையின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் கோவில் திருவிழாவிக்காக இரண்டு பாகன்கள் தலைமையில் யானை அழைத்து வரப்பட்டது. அப்போது யானையின் மீது ஒரு பாகன் அமர்ந்து வர, மற்றொரு பாகன் யானை முன்னே நடந்து வந்தார்.
அப்போது யானையின் மேல் இருந்து பை கீழே விழுந்ததால், பாகன் கீழே இறங்கி பையை எடுத்துள்ளார். அப்போது யானையின் முன்னே இருந்த மற்றொரு பாகன், அங்குசத்தை வைத்து யானையின் முன்னங்காலில் தாக்கியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த யானை பாகன்களை காலால் மிதித்தும், தும்பிக்கையால் அடித்து தாக்கியது.
இதையடுத்து யானையின் வாலை பாகன் பிடித்து இழுத்துள்ளார். இதனால் மேலும் கோபடைந்த யானை தும்பிக்கையால் பாகனை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பாகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி காவல்துறை விசாரணையில் யானைக்கு பயந்து தாக்கியதாக பாகன் கூறியுள்ளார். பாகன்களை யானை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.