திருப்பதி மலையில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த மன நோயாளி பங்காரு ராஜு. அவரை பிடித்த திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பங்காரு ராஜு தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ்சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு அவர் திடீரென்று பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பங்காரு ராஜுவை பிடித்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சி மருத்துவர்கள் அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளையும் நிறுத்தி திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் நிலை சிக்கலாக மாறியது.
தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே நாங்கள் பணியில் தொடர்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருவத்தவர்கள் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து சென்ற தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேசி பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் போராட்டத்தை கைவிட்ட பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.