ஹைதராபாத்தில் திடீரென்று உடைந்து விழுந்த பாதாள சாக்கடையால் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வாகனங்கள், சாலையோர கடைகள் சேதமாகின.
ஹைதராபாத்தில் உள்ள கோஷ் மஹால் பகுதியில் அமைந்திருக்கும் பாதாள சாக்கடை மீது பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.
இது தவிர சாக்கடை மீது போடப்பட்டிருக்கும் கான்கிரீட் மீது சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகியோர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பழங்கள், காய்கறிகள், பொம்மைகள் ஆகியவற்றையும் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் பாதாள சாக்கடை திடீரென்று சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உடைந்து நொறுங்கியது. இதனால் அதன் மீது நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆகியவை பாதாள சாக்கடைக்குள் விழுந்து சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை ஆகையால் பொருட்களை வாங்க ஏராளமானோர் கோஷ்மஹால் பகுதிக்கு வந்திருந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி பாதாள சாக்கடைக்குள் விழுந்த வாகனங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இடிபாடுகளுக்கு இடையே யாராவது சிக்கி கொண்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.