மேற்கு வங்காளம் மாநிலத்தில் துர்காப்பூர் மாவட்டம் கோபால்மத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
உயிரிழந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது உயிரிழந்தது துர்காப்பூரின் பினாசிடி நாகபள்ளி பகுதியை சேர்ந்த அவினாஷ் ஜன் (வயது 19) என தெரிய வந்தது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்திய நிலையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதையடுத்து அவினாசுக்கு, ஆப்ரீன் கட்டூன் என்பவருடன் காதல் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, துர்காப்பூரின் நைன் நகரை சேர்ந்த ஆப்ரீனிடம் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போதுதான் அவருக்கு புது காதலரான பிஜூபாரா பகுதியை சேர்ந்த பிட்டு குமார் சிங் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது.
ஆப்ரீன் கூறிய தகவலை கொண்டு, பிட்டுவை பிடித்து விசாரித்ததில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் ஆப்ரீனுக்கு பிட்டு மீது காதல் வந்ததும் பழைய காதலரை விட்டு ஒதுங்கி இருக்க விரும்பியுள்ளார். ஆனால், அதனை அறியாத அவினாஷ் தொடர்ந்து ஆப்ரீனை காதலித்து வந்து உள்ளார்.
இதனால், இருவரும் சேர்ந்து அவினாஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி, விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும்படி அவரை அழைத்து உள்ளனர்.
பிட்டு வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது, அவினாசுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்து உள்ளனர்.
இதில் போதை ஏறியதும், ஆப்ரீன் இரும்பு தடியை எடுத்து அவினாஷின் தலையில் அடித்து உள்ளார். அவினாஷ் மயங்கி, விழுந்ததும், பிட்டு கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்து அவினாஷின் தலையில் அடித்து, உடைத்து உள்ளார்.
இந்த தாக்குதலில் அவினாஷ் உயிரிழந்ததும், இருவரும் சேர்ந்து அவரது கைகளை கட்டி உள்ளனர். அதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டாரா? அல்லது உயிரிழந்த பின்னர் கைகளை கட்டினார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
அதன்பின்பு, இரு சக்கர வாகனத்தில் உடலை ஏற்றி சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசி விட்டு சென்றுள்ளனர் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.
அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களை துர்காப்பூர் சப்-டிவிசனல் கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.