அமைச்சர் வீட்டிற்குள் கேட்ட துப்பாக்கி சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

அமைச்சர் வீட்டிற்குள் கேட்ட துப்பாக்கி சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான குஷால் கிஷோர் இல்லத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாகுர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் பெயர் வினய் ஸ்ரீவத்சவா என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர் அதிகாலை 4.15 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். உடல் கண்டறியப்பட்ட இடத்தினருகே துப்பாக்கியும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கி உரிமம் அமைச்சரின் மகன் விகாஷ் கிஷோரின் பெயரில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தடயவியல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவரும் எனவும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பேன் என அமைச்சர் குஷால் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞரிக் கொலைக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. சம்பவம் நடந்தபோது வீட்டில் யார் இருந்தார் என்பதும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய உயிரிழந்த நபரின் சகோதரர், அமைச்சர் குஷால் கிஷோர் இல்லத்தின் என் சகோதரர் உயிரிழந்துள்ளார். என் சகோதரர் அமைச்சர் மகனின் நண்பன்.

சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் 3 பேர் இருந்தனர். ஆனால் அப்போது அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோர் எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. கொலை நடந்த சம்பவ இடத்தில் அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

28 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

1 hour ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

17 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

19 hours ago

This website uses cookies.