திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நட்சத்திர ஜோடி நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களுக்கு கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக சாமி தரிசனம் செய்து அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆதி, இரண்டு படங்கள் கைவசம் உள்ளதாகவும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் திருப்பதிக்கு வந்தது மகிழ்ச்சி என கூறினார்.
பெரிய திரைக்கு முழுக்கு போடுவதாக சூசகமாக தெரிவித்த நிக்கி கல்ராணி சீரியல்களில் தலைகாட்ட உள்ளதாக கூறினார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.