திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நட்சத்திர ஜோடி நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களுக்கு கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக சாமி தரிசனம் செய்து அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆதி, இரண்டு படங்கள் கைவசம் உள்ளதாகவும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் திருப்பதிக்கு வந்தது மகிழ்ச்சி என கூறினார்.
பெரிய திரைக்கு முழுக்கு போடுவதாக சூசகமாக தெரிவித்த நிக்கி கல்ராணி சீரியல்களில் தலைகாட்ட உள்ளதாக கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.