கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே டிசி தருவேன் என கல்லூரி நிர்வாகம் கறார் காட்டியதால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் பிரபல கல்வி குழுமமான நாராயணா கல்வி குழுமத்தின் ஜூனியர் கல்லூரி ஒன்று ஹைதராபாத்தில் உள்ள ராமாந்தபூரில் செயல்பட்டு வருகிறது. அங்கு 12 வது வகுப்பு முடித்த மாணவனான நாராயண சுவாமி தன்னுடைய மாற்று சான்றிதழை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
சில நாட்களாக தன்னுடைய மாற்று சான்றிதழுக்காக அந்த மாணவன் அலைந்து திரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டி கடந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் கொடுக்க இயலும் என்று கறார் ஆக கூறிவிட்டார்.
பணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த நாராயண சுவாமி இன்று மதியம் முதல்வர் சுதாகர் ரெட்டி அறைக்கு சென்று தயாராக வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டான். உடனடியாக தன்னிடம் கறார் காட்டிய கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியை கட்டிப்பிடித்து கொண்டான்.
இதனால் இரண்டு பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற ஆசிரியர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ராமானந்தபூர் போலீசார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
This website uses cookies.