தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ்.
அவ்வாறு தினந்தோறும் பள்ளிக்கு வரக்கூடிய ராமதாஸ் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் பள்ளி நேரத்தில் அந்த பெண்ணுடன் ராமதாஸ் இருப்பதை அறிந்த கிராம மக்கள் அந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து ராமதாசை பள்ளியில் இருந்து இழுத்து வந்து கிராமம் மத்தியில் மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வராவ்பேட்டை போலீசார் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் ராமதாசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக நடத்தி வருகின்றனர் .
பள்ளியில் மாணவர்களுக்கு நல்ல போதனை செய்து இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழக்கூடிய ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து ஆசிரியர் சமூகம் இது போன்ற சிலரால் அவப்பெயர் ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.