ஆந்திரா: பாலத்தை தாண்டும்போது கார் நான்கு பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விபத்து. ஒருவர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்னூலை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கார் ஒன்றில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் நந்தியாலா மாவட்டத்திலுள்ள ராயப்பாடு அருகே ஜகதூரில் உள்ள காட்டாறு ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தை தாண்டி செல்ல முயன்றது.
தற்போது அந்த பாலத்தின் மீது சமீபத்து செய்த தொடர் மழை காரணமாக அந்தக் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. இதனை கவனித்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் குதித்து அவர்களை மீட்க முயன்றனர்.
காரின் கண்ணாடியை உடைத்து நான்கு பேரையும் மீட்க முயன்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவர் மரணம் அடைந்தார். மற்ற மூன்று பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார்,தீயணைப்பு படையினர் ஆகியோர் காரை மீட்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.