ஆந்திரா : விஜயவாடா அருகே தவறான பாதையில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது அரசு பேருந்து உரசி சென்ற நிலையில் பெண் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயவாடாவில் போக்குவரத்து விதிகளை மீறி ராங் ரூட்டில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது எதிரில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து லேசாக மோதி சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண் பேருந்தில் ஏறி சுமார் அரை மணி நேரம் ஓட்டுனர் மீது சாமியாடி தீர்த்துவிட்டார். அப்போது பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, தாக்கி, உதைத்து தன்னுடைய வீரத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் உட்பட பலர் எடுத்துக்கூறியும் அவர் தன்னுடைய தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்தநிலையில் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் மேலும் தன்னுடைய குரலை உயர்த்தியவர் டிரைவரை காலால் உதைத்து, சட்டையை பிடித்து இழுத்து கீழே இறங்குடா என்று முன்னைவிட வேகமாக சப்தம் போட்டார்.
இந்த நிலையில் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.