ஆந்திரா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் கிருஷ்ணபள்ளி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி உருவச்சிலையை உடைத்த நபர் சாலையில் உருவச்சிலையை இழுத்துச் சென்றார். இதைக்கண்ட ஆளும் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.
கட்சி தொண்டர்களின் தாக்குதலையும் பொருட்படுத்தாது ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர் ரெட்டி மகனான தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மீதான ஆட்சேபனையை அந்த இளைஞர் தொடர்ந்து தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு எதிராகவும் நடிகர் பவன் கல்யாண் தொடங்கிய ஜன சேனா கட்சிக்கு ஆதரவாக அவர் பேசி வந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பார்வதிபுரம் எம்.எல்.ஏ அலஜங்கி ஜோகாராவ் சம்பவ இடத்தை பார்வையிட்டு உருவச் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் விரைவில் சிலையை புனரமைக்கும் பணி நடைபெறும் என அறிவித்தார்.
உருவச்சிலை உடைத்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கிராம மக்கள் சார்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உருவச் சிலையை உடைத்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி உருவச் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.