கேரளாவில் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
திருச்சூரில் நைக்கனல் என்ற இடம் உள்ளது. இங்கு விவேகோடயம் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்குள் இன்று காலை சுமார் 10.15 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் நுழைந்தார்.
மாணவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சித்தார். அதற்குள், பள்ளி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் அதிரடியாக அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜெகன் என்பதும், பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்டு இருக்கும் ஜெகன் போதையில் முதலில் பள்ளியின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த இருக்கைகளை தள்ளிவிட்டு, பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த ஊழியர்களை நோக்கி காட்டியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென பள்ளி வகுப்பறைக்குள் சென்ற ஜெகன் மூன்று முறை சுட்டுள்ளார். பள்ளி ஊழியர்கள் இவரை தடுப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
ஆனால், அந்த இடத்தில் இருந்து ஜெகன் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், விடாமல் பள்ளி ஊழியர்கள் அவரை விரட்டினர். வெளியே ஓடியவரை அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் இறுதியில் பிடித்தனர்.
மாணவர்களை துப்பாக்கியால் சுடும் நோக்கத்துடன் பள்ளிக்குள் ஜெகன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சூர் கிழக்கு போலீசார் மற்றும் திருச்சூர் நகர குற்றவியல் போலீஸ் ஏசிபி மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் ஜெகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.