திருப்பதி: 4வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதி திருமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் சனிக்கிழமை புரட்டாசி மாதத்தில் ஏற்படும் நான்காவது சனிக்கிழமை ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவது தமிழக பக்தர்களுக்கு வழக்கம்.
இந்த வழக்கத்தை ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, நெல்லூர், கடப்பா, சத்திய சாய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்களும், பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் திருப்பதி மலையில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
எனவே, இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரமும், 300 ரூபாய் தரிசனத்திற்காக மூன்று மணி நேரமும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர் .
இந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் நாளை (வெள்ளி) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.