நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்த முறை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை.
மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லாமல் இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது, நஜ்முல்லா ஹெப்துல்லா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதே போன்று, 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற போது நக்விக்கும் சிறுபான்மையினர் நலத்துறையே ஒதுக்கப்பட்டது.
மேலும் படிக்க: ரேஸில் முதல் ஆளாக குதித்த திமுக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வேட்பாளர் அறிவிப்பு!
18 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த இஸ்லாமிய வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததே அமைச்சரவையில் இஸ்லாமியர் இடம்பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது.
கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 24 இஸ்லாமிய எம்.பி.க்களில் 21 பேர் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர். இதர மூவர் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஓவைசி, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களான அப்துல் ரஷீத் ஷேக் மற்றும் முகமது ஹனீஃபா ஆவர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.