தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் உண்மையான நிலவரத்தை அறியாமல் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
140 கோடி மக்களில் வெறும் 3 ஆயிரம் பேரிடம் இருந்து மட்டும் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட பட்டியல் மூலம் எப்படி உண்மையான நிலவரத்தை நம்மால் அறிய முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் கருத்தை விமர்சித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்ட முறையை அறிந்து கொள்ளாமல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதை விமர்சித்து பேசியிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு, உணவு தட்டுப்பாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மத்திய பா.ஜ.க. அரசின் தகுதி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு மூலம் தெரியவந்திருப்பதாக கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.