தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் உண்மையான நிலவரத்தை அறியாமல் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
140 கோடி மக்களில் வெறும் 3 ஆயிரம் பேரிடம் இருந்து மட்டும் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட பட்டியல் மூலம் எப்படி உண்மையான நிலவரத்தை நம்மால் அறிய முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் கருத்தை விமர்சித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்ட முறையை அறிந்து கொள்ளாமல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதை விமர்சித்து பேசியிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு, உணவு தட்டுப்பாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மத்திய பா.ஜ.க. அரசின் தகுதி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு மூலம் தெரியவந்திருப்பதாக கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.