மோடி மோடி என கோஷமிடுபவர்களின் கன்னத்தில் பளார் கொடுக்க வேண்டும் : அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவராஜ் தண்டகி கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது:-பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் அதை கொடுக்கவில்லை. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகளை பா.ஜ.க. அரசு வழங்க தவறியதால் பிரதமரை புகழ்ந்து மோடி, மோடி என்று கோஷமிடும் அவரது இளம் ஆதரவாளர்களை கன்னத்தில் அறைய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பொய்யின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு முட்டாள் ஆக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். அவை எங்கே உள்ளது? ஒரு பெயரை கூறுங்கள்.
பிரதமர் மோடி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு புத்திசாலி. நன்றாக உடை அணிகிறார். புத்திசாலித்தனமாக பேசுகிறார். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். தேர்தலில் ஓட்டு கேட்க அவர்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு வளர்ச்சி பணியை கூட செய்ய திறமையற்ற இவர்கள் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தனர் என பேசினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.